ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

சந்தானம், சூரி ஆகியோர் கொடுத்த இடைவெளியால், உள்ளே நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தவர் யோகிபாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர், சில படங்களில் கதையின் நாயகனாவும் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார்.
ரசிகர் ஒருவர் யோகிபாபுவின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு 'ஆமாம்ப்பா' என பதிலளித்து இதை உறுதி செய்துள்ளார் யோகிபாபு. நெல்சன் திலீப்குமாரின் முதல்படமான கோலமாவு கோகிலாவில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்தார் என்பதும், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் நான்காவது முறையாக இவர் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.