'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி |
கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம், மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக அதில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் அசினை நடிக்க வைக்க முயற்சித்ததாக தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் அந்த கதாபாத்திரத்தை மலையாள டீச்சராகத்தான் உருவாக்கி இருந்தேன். அதில் அசினை நடிக்கவைக்க முயற்சி செய்து அது முடியாமல் போனது. அதன்பிறகு ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் மாற்றம் செய்து தமிழ் டீச்சராக மாற்றி, அதில் சாய்பல்லவியை நடிக்க வைத்தேன். என் சிறுவயதில் ஊட்டியில் படித்ததாலும், கல்லூரி படிப்பை சென்னையில் படித்ததாலும் இயல்பாகவே தமிழ் மீது எனக்கு ஆர்வம் இருந்தது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.