பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம், மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக அதில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் அசினை நடிக்க வைக்க முயற்சித்ததாக தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் அந்த கதாபாத்திரத்தை மலையாள டீச்சராகத்தான் உருவாக்கி இருந்தேன். அதில் அசினை நடிக்கவைக்க முயற்சி செய்து அது முடியாமல் போனது. அதன்பிறகு ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் மாற்றம் செய்து தமிழ் டீச்சராக மாற்றி, அதில் சாய்பல்லவியை நடிக்க வைத்தேன். என் சிறுவயதில் ஊட்டியில் படித்ததாலும், கல்லூரி படிப்பை சென்னையில் படித்ததாலும் இயல்பாகவே தமிழ் மீது எனக்கு ஆர்வம் இருந்தது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.