ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சமூக சேவை நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
திரையுலகத்தில் உள்ள சோனு சூட், சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
'கேஜிஎப் 2, சலார்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களான ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தினர் மாண்டியாவில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களையும், 20 ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் 'சலார்' படக்குழுவினர் 150 பேருக்கு தலா 5000 ரூபாய் வழங்கியுள்ளார்கள். மேலும், தெலுங்கு பிலிம் சேம்பர் உறுப்பினர்கள் 3200 பேருக்காக 35 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இப்படியான உதவிகளைச் செய்து கொடுத்ததாக ஒரு தகவல் கூட இதுவரை வெளிவரவில்லை. பெப்ஸி சங்கத்திற்கு மட்டும் அஜித், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் நிவாரண உதவிகளை அளித்துள்ளனர்.
கடந்த வருடம் முதல் அலை வந்த போது கிடைத்த உதவிகளை விட இந்த முறை உதவிகள் குறைவாகவே கிடைத்துள்ளன. பெப்ஸி சார்பில் 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தும் கூட தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வராதது ஏன் என்று தெரியவில்லை.