பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
நடிகர் மகேஷ்பாபு தனது தந்தையும், முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருமான கிருஷ்ணாவின் 78ஆவது பிறந்த நாளான நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து தந்தையின் பிறந்த நாளில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் என்ற கிராமத்து மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளித்துள்ளார். அந்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவலையும், போட்டோக்களையும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மகேஷ்பாபு. இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மகேஷ்பாபு இந்த கிராமத்தை ஏற்கனவே தத்தெடுத்து பல திட்டங்களை செயல்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.