முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா |
தமிழில் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, ஜெகன் மோகினி, இசை, கில்லாடி, உள்பட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா. தற்போது நாஸ்டிக், மொலி பூவு படங்களில் நடித்து வருகிறார்.
மும்பை தானே பகுதியில் வசித்து வரும் மீரா சோப்ரா, போலியான அடையாள அட்டையை காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தானே மாநகராட்சியின் பார்க்கிங் பிளாசா கொரோனா தடுப்பூசி முகாமில் அவர் தடுப்பூசி போட்டிருக்கிறார். இங்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் மருத்துவ பணியாளர் போன்ற அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டை இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து தனது டுவிட்டரில், நான் ஆதார் கார்டை பதிவேற்றி முன்பதிவு செய்து அதன்படியே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதற்கு பதிலிளித்துள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர். தடுப்பூசி போட முன்பதிவு செய்ய ஆதார் கார்டு போதுமானது. ஆனால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாத இடத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே வயது வித்தியாசம் இன்றி தடுப்பூசி போடப்படும். அதற்கு அவர்கள் ஆதார் தவிர்த்து முன்கள பணியாளருக்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். என்று பதில் அளித்திருக்கிறார்.
மீரா சோப்ரா போலியான அடையாள அட்டை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்ற விசாரணையை மும்பை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.