பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வம்சி பைடிபள்ளி. இவர் விஜய் நடிக்க உள்ள 66வது படத்தை இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளிவந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது உண்மைதான் என வம்சி பைடிபள்ளி தெரிவித்திருக்கிறார்.
“எனது திரையுலகப் பயணத்தில் இப்படம் மிகப் பெரும் பட்ஜெட் படமாக இருக்கும். கோவிட் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படம் பற்றிய அறிவிப்பு வரும். தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார், தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
வேறொரு கதையாசியர் படத்தின் கதையை எழுதித் தருகிறார். அதன்பின் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை நடத்தி வருகிறோம். அதை முடிப்பதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த வேலைகள் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்.
வம்சி பைடிபள்ளி தெலுங்கில் பிரபாஸ் நடித்த முன்னா, ஜுனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம், ராம் சரண் நடித்த எவடு, கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ஊபிரி - தமிழில் தோழா, மகேஷ்பாபு நடித்த மகரிஷி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரும் விஜய்யும் இணையும் படம் பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.
விஜய், தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும்.