ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியன் 2 படம் பல காரணங்களால் திட்டமிட்டபடி முடிவடையாமல் தாமதமாகி வந்ததால், ராம் சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் ஹிந்தி ரீமேக்கையும் இயக்க தயாரானார் இயக்குனர் ஷங்கர்.
ஆனால் இந்த செய்தி வெளியானதுமே இந்தியன்-2வை முடித்த பிறகுதான வேறு படத்தை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். அதையடுத்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஷங்கர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கிடையே ஷங்கருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று டோலிவுட், பாலிவுட் பிலிம் சேம்பர்களுக்கும் லைகா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இப்படியான நிலையிலும் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆலியாபட் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.