புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
இந்தியன் 2 படம் பல காரணங்களால் திட்டமிட்டபடி முடிவடையாமல் தாமதமாகி வந்ததால், ராம் சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் ஹிந்தி ரீமேக்கையும் இயக்க தயாரானார் இயக்குனர் ஷங்கர்.
ஆனால் இந்த செய்தி வெளியானதுமே இந்தியன்-2வை முடித்த பிறகுதான வேறு படத்தை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். அதையடுத்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஷங்கர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கிடையே ஷங்கருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று டோலிவுட், பாலிவுட் பிலிம் சேம்பர்களுக்கும் லைகா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இப்படியான நிலையிலும் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆலியாபட் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.