கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
அந்தாள ராட்சசி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. சசிகுமாரின் பிரம்மன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் மாயவன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது, அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. ஆனால் அவரை ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக இருக்கும் அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், லாவண்யா யார், அவரை கடத்தியவர்கள் யார் என்பதும் படத்தின் சஸ்பென்ஸ் பகுதி. விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.