புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
சுசீந்திரன் இயக்க, ஜெய் நாயகனாக நடித்திருக்கும் ஒரு படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் திவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் முடிவடைவதற்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டது. என்றாலும் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு இதனை தியேட்டரில் வெளியிடலாம் என்று கருதி இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியும் நிலவுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, தற்போது நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதே போல சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இன்னொரு படமான ஷிவா ஷிவா என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.