ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் வாரிசு நடிர்களில் ஒருவராக அறிமுகமானவர் அதர்வா. 80, 90களில் இளம் நாயகனாக வலம் வந்த நடிகர் முரளியின் மூத்த மகன். 2010ல் வெளிவந்த 'பாணா காத்தாடி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதர்வா. 2013ல் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பரதேசி' படம் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஒரு படமாக இருந்தது.
அதன்பிறகு அவர் நடித்த படங்களில் 'ஈட்டி, இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் மட்டுமே அவருக்குக் குறிப்பிடும்படியான வெற்றிப் படங்களாக அமைந்தது. அதன்பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் நடித்து வெளிவந்த 'பூமராங், 100, தள்ளி போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன், நிறங்கள் மூன்று' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படவில்லை.
இப்போது நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அதர்வாவுக்கு நாளை மறுதினம் 'டிஎன்ஏ' படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அவசியமான ஒன்று. இத்தனை வருடங்கள், இவ்வளவு படங்கள் அவருக்குத் தராத திருப்புமுனையை 'டிஎன்ஏ' தந்தால் தான் அவருக்கான அடுத்த படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.