நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி. நல்ல திறமையான நடிகை என்ற பெயர் எடுத்தார். அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, நாடோடிகள் 2, பாவ கதைகள், உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு பேசப்பட்டது.
தற்போது அவருக்கு தமிழில் படங்கள் கையில் இல்லாவிட்டாலும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த வக்கீல் சாப் படம் பெரிய வெற்றி பெற்று அஞ்சலிக்கு மீண்டும் ஒரு எழுச்சியை கொடுத்திருக்கிறது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கும் அஞ்சலி இனி நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் உறுதிய அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வக்கீல்சாப்பை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி. இது மிகவும் பொருத்தமான கதை என்பதால் நான் எப்போதும் பெருமைப்படுவேன். இந்த படம் எனது தொழில் வாழ்க்கையின் மற்றொரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்.
என் அன்பான ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக எனது வேலையை நேசித்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி. நான் உங்களுக்கு நல்ல படங்களை மட்டுமே தந்து, தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதிய உள்ள அஞ்சலி, வக்கீல் சாப் படத்தின் இயக்குனர் வேனுவுக்கு கலர் பொடி பூசி மகிழும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.