ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தடுப்பு நடவடிக்கைக்கு கொரோனா நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து திரையுலகினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
திரையுலகில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதி அளித்தனர். தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் (ரூ.25 லட்சம்) நடிகராக உதயநிதி (ரூ.25 லட்சம்), அஜித் (ரூ.25 லட்சம்), சவுந்தர்யா ரஜினியின் மாமனார் குடும்பத்தினர் சார்பாக (ரூ.1 கோடி) நிதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இயக்குனர் வெற்றிமாறன்(ரூ.10 லட்சம்), நடிகர் சிவகார்த்திகேயன் (ரூ.25 லட்சம்), நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர் சார்பாக ரூ.10 லட்சம்) என முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி குடும்பத்தினர் இதற்கான காசோலையை வழங்கினர்.