மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தடுப்பு நடவடிக்கைக்கு கொரோனா நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து திரையுலகினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
திரையுலகில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதி அளித்தனர். தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் (ரூ.25 லட்சம்) நடிகராக உதயநிதி (ரூ.25 லட்சம்), அஜித் (ரூ.25 லட்சம்), சவுந்தர்யா ரஜினியின் மாமனார் குடும்பத்தினர் சார்பாக (ரூ.1 கோடி) நிதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இயக்குனர் வெற்றிமாறன்(ரூ.10 லட்சம்), நடிகர் சிவகார்த்திகேயன் (ரூ.25 லட்சம்), நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர் சார்பாக ரூ.10 லட்சம்) என முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி குடும்பத்தினர் இதற்கான காசோலையை வழங்கினர்.