எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பில்லா பாண்டி, வேட்டை நாய் படங்களை தொடர்ந்து ஆர்கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விசித்திரன். கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தான், தற்போது தமிழில் 'விசித்திரன்' ஆக ரீமேக்காகி உள்ளது.. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார்.
ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ள இந்தப்படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. படத்தை பார்த்த இயக்குனர் பாலாவும் ஆர்கே.சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
இதுபற்றி ஆர்கே சுரேஷ் கூறும்போது, “முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்தன.. ஆனால் என் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் இயக்குனர் பாலா தான் என்னை கதாநாயகனாக நடிக்கும்படி கூறினார். அதுமட்டுமல்ல ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமாரே இந்தப்படத்தை இயக்கட்டும் என சுதந்திரமும் கொடுத்தார். தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட நிறைய பேர் கேட்கிறார்கள்.. தயாரிப்பாளர் பாலாதான் பட ரிலீஸ் குறித்து தீர்மானிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.