புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களுக்கு முன்பே தனது ரவுடி பிக்சர்ஸ் பேனரில் அவர் நடித்து முடித்துள்ள நெற்றிக்கண் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் அடுத்தபடியாக ஈரம் அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவழகனிடத்தில் கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்தபோதும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் அவர் படத்தில் நடிப்பது தாமதமாகி வந்திருக்கிறது. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததும் அவரது இயக்கத்தில் நடிக்க நயன்தாரா தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
ஈரம், வல்லினம், ஆறாது சினம் படங்களைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் குற்றம்-23 படத்தை இயக்கிய அறிவழகன் மீண்டும் அவர் நடிப்பில் தற்போது பார்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.