ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தற்போது சிரஞ்சீவியை வைத்து ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கொரட்டால சிவா. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது.
ஆனால் இந்த தகவல் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. காரணம் பிரபாஸுடன் சாஹோ படத்தில் இணைந்து நடித்த ஷரத்தா கபூர் பற்றி அப்போது பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது.. ஆனால் படமும் சரியாக போகவில்லை. ஷ்ரத்தா கபூரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தோல்வி சென்டிமென்ட் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தையும் பாதித்துவிட கூட என்கிற விதமாக சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்.