பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ள அளவிற்கு இன்று நடிகர் தனுஷ் வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய அண்ணன் இயக்குனர் செல்வராகவனும் ஒரு முக்கிய காரணம்.
2002ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இருவரும் இணைந்த முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படம் வெளிவந்தது. அப்படத்தில் செல்வராகவன் ஒரு திரைக்கதை எழுத்தாளர் மட்டுமே. ஆனால், படத்தை இயக்கியது அவர்களின் அப்பா கஸ்தூரிராஜா. அந்தப் படத்தை செல்வராகவன் தான் இயக்கியிருப்பார் என இன்று வரை பலரும் சொல்லி வருகிறார்கள். அதனால் தான் இன்றைய தினத்தை தனுஷ், செல்வராகவன் இருவரது கூட்டணியின் 19வது ஆண்டு என அவர்களது ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் இதுவரை, “காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்து 'நானே வருவேன்' என்ற புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
'துள்ளுவதோ இளமை' படம் வெளிவந்த போது தனுஷ் மீது எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகம் வந்தன. ஆனால், போகப் போக தன்னுடைய நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டு தேசிய விருதுகளை வாங்கும் அளவிற்கும், ஹிந்திப் படங்களில் நடிக்கும் அளவிற்கும் தன்னை உயர்த்திக் கொண்டவர் தனுஷ். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனுக்குப் பிறகு விக்ரம் தான் திறமையான நடிகர் என பேசப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பேச்சு அனைத்தும் தனுஷ் மீது மட்டுமே திரும்பியிருக்கிறது.