ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
உலக அளவில் பல நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செப்'. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரான்க் ரோட்டம் என்பவரது எண்ணத்தில் உருவான நிகழ்ச்சி இது. 1990ம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, பின்னர் 2005ம் ஆண்டு சில மாற்றங்களுடன் பிபிசி டிவியில் ஒளிபரப்பானது.
தற்போது உலகம் முழுவதும் 40 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு முன்னணி டிவியில் விரைவில் இந்த நிகழ்ச்சி தனது ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே இதே டிவியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது போல 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.