ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கிய சினிமா பிரபலங்கள் மறைந்தது ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்(61), இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் (59), இன்று இயக்குனர் கே.வி.ஆனந்த் (54) ஆகியோரது திடீர் மரணம் யாருமே எதிர்பார்க்காதவையாக அமைந்துவிட்டது.
இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த் இருவருமே சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தால் அதில் சமூகக் கருத்துக்களையும் பதிவிடும் விதத்தில்தான் படங்களை இயக்கியிருக்கிறார்கள். நடிகர் விவேக் அவருடைய படங்களில் சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை தனது நகைச்சுவை வசனங்களின் மூலம் பதிய வைத்துள்ளார்.
50 வயதிலிருந்து 60 வயதில் அவர்களுடைய மரணம் நிகழ்ந்தது அதிர்ச்சியானதுதான். இன்னும் பல வருடங்கள் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைப் பார்க்கிறோம்.
இவர்களின் மறைவு தமிழ் சினிமா உலகத்தையும் தாண்டி மற்ற மொழிக் கலைஞர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.




