இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று பரவியதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஐதராபாத் புறநகரில் உள்ள அவருடைய பார்ம் ஹவுசில் அவருக்கென பிரத்யேகமாக சில மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கொரோனா தொற்றிலிருந்து உடல்நலம் தேறினாலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை அவர் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.
பவன் கல்யாண் நடித்து இந்த மாதம் தியேட்டர்களில் வெளியான 'வக்கீல் சாப்' படம் ஆரம்பத்தில் நல்ல வசூலுடன் ஓடியது. பின்னர் வசூல் குறைந்தது. இந்நிலையில் தியேட்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தை ஓடிடி தளத்தில் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
பவன் கல்யாண் அடுத்து 'ஹரிஹர வீர மல்லு,' மற்றும் மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். ஜுலை மாதத்திற்குப் பிறகுதான் அப்படங்களின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள உள்ளாராம்.