மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் தலைவி. ஜெ.வாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ள இப்படம் தமிழ், ஹிந்தியில் தயாராகியுள்ளது. அதோடு மலையாளம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளன.
இப்படத்தை ஏப்ரல் 23-ந்தேதி வெளியாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மும்பையில் ஊரடங்கு, தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் அனுமதி போன்ற காரணங்களால் தலைவி ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தலைவி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாராகி விட்டதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அந்த செய்தியை தற்போது தலைவி படக்குழு மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தலைவி படத்தின் தமிழ்ப்பதிப்பை அமேசானிலும், ஹிந்தி பதிப்பை நெட்பிளிக்சிலும் வெளியிட திட்டமிட்டிருப்பது உண்மைதான். ஆனால் முதலில் தியேட்டர்களில் தான் தலைவி வெளியாகும். அதன்பிறகு தான் ஓடிடி தளங்களில் வெளியிடுவோம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.