ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ்த் திரையுலகத்தில் சிலரது மறைவு தான் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. சினிமாவில் எத்தனையோ பேர் வரலாம், போகலாம் ஆனால், ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்க முடிகிறது. அந்த விதத்தில் மக்களின் மனங்களை வென்ற மூவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மரணம் அடைந்தது தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பாகும்.
2019ம் ஆண்டில் வசனகர்த்தா, நடிகர், நாடகக் கலைஞர் கிரேஸிமோகன், 2020ம் ஆண்டில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இந்த 2021ம் ஆண்டில் நடிகர் விவேக் ஆகியோரது மறைவு சினிமாவை விரும்பிச் சென்றுப் பார்க்கும் ரசிகர்களையும், சினிமாவை நேசிக்கும் பல குடும்பத்தினரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவர்களது மறைவுக்காக பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல் பதிவுகளைப் பதிவிடுவதே அதற்கு சாட்சி.




