தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ம் ஆண்டு வெளிவந்த படம் 'மனதில் உறுதி வேண்டும்'. சுஹாசினி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அந்தப் படத்தில் மற்ற நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் புதுமுகங்கள் தான்.
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கூட அப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் தான் விவேக், ரமேஷ் அரவிந்த், நடிகர் பிரகாஷ்ராஜின் முதல் மனைவி லலிதகுமாரி, கன்னட நடிகர் ஸ்ரீதர், நடிகை ஸ்ரீப்ரியாவின் தம்பி சந்திரகாந்த் உள்ளிட்டவர்கள் அறிமுகமானார்கள்.
அப்படத்தில் விவேக், ரமேஷ் அரவிந்த் இருவரும் சகோதரர்களாக நடித்திருப்பார்கள். ரமேஷ் அரவிந்த் தற்போது கன்னடத் திரையுலகில் இயக்குனராகவும் பல வெற்றிகளைக் கொடுத்த சீனியர் நடிகராகவும் உள்ளார்.தன்னுடன் அறிமுகமான விவேக் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ள இரங்கலில், “ஆழ்ந்த இரங்கல் விவேக், புத்திசாலித்தனத்துடன் கூடிய அவருடைய நகைச்சுவை மிகவும் அரிதான ஒன்று. தமிழில் எங்கள் இருவருக்கும் முதல் படமான 'மனதில் உறுதி வேண்டும்' படத்தை நினைத்துப் பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.