ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் சினிமாவில் நடிகர் யோகிபாபுவின் கை தான் தற்போது ஓங்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான சுல்தானில் காமெடியனாக, மண்டேலாவில் கதையின் நாயகனாக, கர்ணனில் குணச்சித்திர நடிகராக என கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் வீரப்பன் கஜானா என்கிற படத்தில் புதையலை தேடி அலையும் நபராக நடித்துள்ளார் யோகிபாபு. மகளும் காணாமல் போன தனது குரங்கை தேடி காட்டில் அலையும் நபராக மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார். ராஜேஷ், தேவா மற்றும் பூஜா என இளசுகளின் முக்கோண காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தாலும் யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரன் இருவருக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை இயக்கிய கவுதம்ராஜ் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். யாசின் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். குற்றாலம், நாகர்கோவில், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.