எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்குத் திரையுலகில் பவர்புல்லான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். சினிமா, அரசியல் இரண்டிலும் காலடி வைத்துள்ளவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'அஞ்ஞாதவாசி'. 2018ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் படம் தோல்வியைத்தான் தழுவியது. அதற்குப் பின் அரசியலில் தீவிரம் காட்டினார்.
2019ம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை. ஒரு கட்டத்தில் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
அதில் முதலாவதாக 'வக்கீல் சாப்' படம் நாளை(ஏப்., 9) வெளியாகிறது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த 'பின்க்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஆனால், தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தைத்தான் தெலுங்கு ரீமேக்கிற்கு அடிப்படையாக வைத்துள்ளார்கள்.
இரண்டு மொழிகளிலும் கிடைத்த வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் என டோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள். மூன்று வருடங்களாக பவன் கல்யாண் நடித்து படம் வெளிவராததால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்களாம். அதன் காரணமாகத்தான் டிரைலருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள்.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகம் சில வெற்றிப் படங்களைக் கொடுத்து சமாளித்துவிட்டது. அது இப்படத்திலும் தொடரும் என அவர்கள் நம்புகிறார்கள்.