புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனாவின் அடுத்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அது போல அறிவிப்பு வரலாம் என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களிடம் வந்துள்ளது.
தமிழில் நேற்று வெளியான 'சுல்தான்' படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. அங்கும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அடுத்த வாரம் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் வெளியாக உள்ளது. ஆனால், மக்களிடையே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் லாக்டவுன் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் டென்ஷன் ஆகியுள்ளனர்.
மேலும், 'கர்ணன்' படத்தை தென்னிந்திய மாநிலங்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருவேளை 50 சதவீத இருக்கைகள் என்றால் அது படத்தின் வசூலை பாதிக்கலாம். அதோடு அதற்கடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாத நிலையும் ஏற்படலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் டென்ஷன் போக வேண்டுமென்றால் லாக்டவுன் வராமல் இருக்க வேண்டும். இருந்தாலும் அதைப் பற்றி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.