பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனாவின் அடுத்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அது போல அறிவிப்பு வரலாம் என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களிடம் வந்துள்ளது.
தமிழில் நேற்று வெளியான 'சுல்தான்' படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. அங்கும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அடுத்த வாரம் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் வெளியாக உள்ளது. ஆனால், மக்களிடையே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் லாக்டவுன் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் டென்ஷன் ஆகியுள்ளனர்.
மேலும், 'கர்ணன்' படத்தை தென்னிந்திய மாநிலங்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருவேளை 50 சதவீத இருக்கைகள் என்றால் அது படத்தின் வசூலை பாதிக்கலாம். அதோடு அதற்கடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாத நிலையும் ஏற்படலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் டென்ஷன் போக வேண்டுமென்றால் லாக்டவுன் வராமல் இருக்க வேண்டும். இருந்தாலும் அதைப் பற்றி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.