தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்ற பட்டியலில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகியவைதான் இடம் பெறும். மற்ற மொழித் திரைப்படங்களில் அவற்றை விட குறைவான சம்பளமே கிடைக்கும்.
தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களில் 'பாகுபலி' படம் வரும் வரையில் ஷங்கர் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இயக்குனர் ராஜமவுலி ஷங்கரை முந்திவிட்டார்.
ராஜமவுலிக்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம். 'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம் என தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது. ஷங்கர் அடுத்து இயக்கும் தெலுங்குப் படத்திற்கும் அதே சம்பளம் பேசியிருக்கலாம், அல்லது கூடுதலாக 5 கோடி வரை பேசியிருக்கலாம் என்கிறார்கள்.
நடிகர்களில் கூட 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் மற்ற தென்னிந்திய நடிகர்களை மிஞ்சிவிட்டார். அவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம், சில பல உரிமைகள் தரப்படுகின்றன.