புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்ற பட்டியலில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகியவைதான் இடம் பெறும். மற்ற மொழித் திரைப்படங்களில் அவற்றை விட குறைவான சம்பளமே கிடைக்கும்.
தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களில் 'பாகுபலி' படம் வரும் வரையில் ஷங்கர் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இயக்குனர் ராஜமவுலி ஷங்கரை முந்திவிட்டார்.
ராஜமவுலிக்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம். 'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம் என தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது. ஷங்கர் அடுத்து இயக்கும் தெலுங்குப் படத்திற்கும் அதே சம்பளம் பேசியிருக்கலாம், அல்லது கூடுதலாக 5 கோடி வரை பேசியிருக்கலாம் என்கிறார்கள்.
நடிகர்களில் கூட 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் மற்ற தென்னிந்திய நடிகர்களை மிஞ்சிவிட்டார். அவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம், சில பல உரிமைகள் தரப்படுகின்றன.