ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என 'பாகுபலி' படம் வெளிவரும் வரை பெயரை வைத்திருந்தவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர். 'பாகுபலி' படம் வந்த இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதும் அந்த 'பிரம்மாண்ட இயக்குனர்' என்ற பெயர் இயக்குனர் ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை நிறுத்திவிட்டு அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கப் போகும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.
அந்தப் படம் 'முதல்வன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 1999ம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ரலா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முதல்வன்'. அப்படத்தில் அர்ஜுன் 'ஒரு நாள் முதல்வர்' ஆக அதிரடி செய்திருப்பார்.
அந்த முதல்வர் கதாபாத்திரத்தில் தான் ராம் சரண் நடிக்கப் போகிறாராம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படம் மூலம் ராம் சரண் தமிழில் அறிமுகமாகிறார் என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு, ஹிந்தியில் மட்டும் தான் நேரடியாக உருவாக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படலாம்.