‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இதுவே தாய் சங்கமாக மதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சங்கத்தில் நடந்த பல குழப்பங்கள் காரணமாக தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்து சங்கத்தை நடத்தியது. இந்த நேரத்தில் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். தற்போது இதன் தலைவராக உஷா டி.ராஜேந்தர் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்புக்கு வந்தனர். தற்போது சங்கத்தின் சார்பில் மற்ற இரண்டு சங்கங்கள் மீதும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்க செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்கள் புதிதாக தொடங்கபட்டுள்ளது. இந்த சங்கங்களால் தேவையில்லாமல் பெயர் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு சங்கத்தின் பெயர் போன்றே இன்னொரு சங்கம் தொடங்கப்படக்கூடாது என்ற விதிமுறை இருப்பதால் மேற்கண்ட இரண்டு சங்கங்களின் பதிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக வருகிற ஏப்ரல் 8ந் தேதிக்கு இரு சங்கங்களும் பதில் அனுப்ப நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.




