பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இதுவே தாய் சங்கமாக மதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சங்கத்தில் நடந்த பல குழப்பங்கள் காரணமாக தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்து சங்கத்தை நடத்தியது. இந்த நேரத்தில் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். தற்போது இதன் தலைவராக உஷா டி.ராஜேந்தர் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்புக்கு வந்தனர். தற்போது சங்கத்தின் சார்பில் மற்ற இரண்டு சங்கங்கள் மீதும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்க செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்கள் புதிதாக தொடங்கபட்டுள்ளது. இந்த சங்கங்களால் தேவையில்லாமல் பெயர் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு சங்கத்தின் பெயர் போன்றே இன்னொரு சங்கம் தொடங்கப்படக்கூடாது என்ற விதிமுறை இருப்பதால் மேற்கண்ட இரண்டு சங்கங்களின் பதிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக வருகிற ஏப்ரல் 8ந் தேதிக்கு இரு சங்கங்களும் பதில் அனுப்ப நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.