திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' |
'ஒரு கைதியின் டயரி' என்கிற பரபர ஆக்ஷன் படத்திற்கு பிறகு அழகான காதல் கதை ஒன்றை படமாக்க விரும்பினார் பாரதிராஜா. இதற்காக அவர் 'பச்சைக்கொடி' என்ற தலைப்பு வைத்து ஒரு கதையும் தயாராக வைத்திருந்தார். அப்போது அவர் கையில் 'முதல் மரியாதை' ஸ்கிரிப்டும் ரெடியாக இருந்தது. ஆனால் சிவாஜி கால்ஷீட் கிடைக்காததால் 'பச்சைக்கொடி'யை ஆரம்பித்தார்.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தினார். நடிகராக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். நாயகியாக அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ரஞ்சனியை தேர்வு செய்திருந்தார்.
படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். படத்திற்காக 'பூஜைகேத்த பூவிது' பாடலையும் ரஞ்சனியை வைத்து படமாக்கினார்.
இதற்கிடையில் முதல் மரியாதை படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக் கொண்டதும் 'பச்சைக்கொடி'யை அப்படியே விட்டு விட்டு அந்த படத்தை இயக்க தொடங்கி விட்டார். பச்சைக்கொடிக்காக தேர்வான ரஞ்சனியை 'முதல் மரியாதை' படத்தில் நடிக்க வைத்தார். 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் 'நீதானா அந்த குயில்' என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் 'பச்சைக்கொடி' கதையை பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் இயக்கினார். பாண்டியராஜன், நிரோஷா, ஜனகராஜ், நடித்தனர்.