புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சண்டைக்கோழி 2 மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த அப்பாணி சரத், ஜீ தமிழில் வெளியான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது ஆரி நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரும் சிகாமணி மற்றும் சகலகலாசலா போன்ற திரைப்படங்களை இயக்கியவருமான வினோத் குருவாயூர் இயக்குகிறார். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டி மீடியா தயாரிக்கிறது.
படம் குறித்து இயக்குனர் வினோத் குருவாயூர் கூறியதாவது: தமிழ்நாடு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் எனும் எனது கனவு தற்போது நிறைவேறி உள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. அது குறித்து நன்கு ஆராய்ந்து இந்த படத்தை உருவாக்குகிறோம் படப்பிடிப்பு மே 15 அன்று தொடங்குகிறது. என்றார்.