Advertisement

சிறப்புச்செய்திகள்

நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! | பிப்ரவரி 6ல் ஒரே படம், பிப்ரவரி 14ல் 7 படம் ரிலீஸ் | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்கான காரணம் சொன்ன தில் ராஜு | பிளாஷ்பேக்: பி பி ஸ்ரீநிவாஸ் திரையிசைப் பயணத்தில் வசந்தம் வீச வைத்த “காலங்களில் அவள் வசந்தம்” | உதட்டில் முத்தம் - சர்ச்சையில் பாடகர் உதித் நாராயண் | பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ் | உலக தரத்தில் எம்புரான் டீசர் ; பிரபாஸ் பாராட்டு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தொடங்கியது அண்ணாத்த படப்பிடிப்பு : தமிழ்நாட்டிலேயே படத்தை முடிக்க முடிவு

17 மார், 2021 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Annatha-shooting-begins-again

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் தான் கொரோனா தொற்று உருவானது. இதனால் 20 சதவிகித படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் மீண்டும் அண்ணாத்த படபிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாளிலேயே படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தபோதும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார். அண்ணாத்த படத்தை முடித்து கொடுப்பது என் கடமை அதை செய்வேன் என்றார்.

இந்த நிலையில் கொரோனா 2வது அலை பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதால் அதற்கு முன்னதாக படத்தை முடித்து விட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்காக சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கு ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாளில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

கடுமையான கட்டுபாடுகள், மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே பணியாளர்கள் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். படத்தின் வெளிப்புற காட்சிகளையும் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கி தமிழ்நாட்டுக்குள்ளேயே படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இரிடியத்தை வைத்து ரூ.26.20 கோடி மோசடி : நடிகை ஜெயசித்ரா மகன் கைதுஇரிடியத்தை வைத்து ரூ.26.20 கோடி மோசடி : ... ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறியது சூரரைப்போற்று ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறியது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in