சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்று கலந்து கொண்ட விஷால் ஒரே ஒரு நாள் மட்டும் கலந்து கொண்டுவிட்டு அதன் பிறகு மூன்று நாட்கள் வரை எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரை மொபைல் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
மூன்று நாட்கள் கழித்து வந்தவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போதும் இதே போல்தான் சொல்லாமல் கொள்ளாமல் சில நாட்கள் எங்கோ காணாமல் போய்விட்டார். விஷாலும் ஒரு தயாரிப்பாளர்தான், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்தான். அவரே இப்படி நடந்து கொள்வது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விஷால் நடித்து வெளிவந்த 'சக்ரா' படம் இன்று 25 நாளைத் தொட்டாலும் இந்தப் படத்தால் விஷாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர் நம்பியிருக்கும் ஒரே படமான 'எனிமி' படத்திற்கும் அவரே எனிமி ஆகாமல் இருந்தால் தான் அவருக்கு நல்லது என்கிறது திரையுலக வட்டாரம்.