‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்று கலந்து கொண்ட விஷால் ஒரே ஒரு நாள் மட்டும் கலந்து கொண்டுவிட்டு அதன் பிறகு மூன்று நாட்கள் வரை எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரை மொபைல் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
மூன்று நாட்கள் கழித்து வந்தவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போதும் இதே போல்தான் சொல்லாமல் கொள்ளாமல் சில நாட்கள் எங்கோ காணாமல் போய்விட்டார். விஷாலும் ஒரு தயாரிப்பாளர்தான், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்தான். அவரே இப்படி நடந்து கொள்வது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விஷால் நடித்து வெளிவந்த 'சக்ரா' படம் இன்று 25 நாளைத் தொட்டாலும் இந்தப் படத்தால் விஷாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர் நம்பியிருக்கும் ஒரே படமான 'எனிமி' படத்திற்கும் அவரே எனிமி ஆகாமல் இருந்தால் தான் அவருக்கு நல்லது என்கிறது திரையுலக வட்டாரம்.