இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ்த திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருடன் பணி புரியாத பல திரைக்கலைஞர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.
ஆனால், அவருடைய 'லாபம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே, தமிழ் சினிமா நடிகைகள் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிந்த திரைக்கலைஞர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் கூட எந்தவிதமான ஆறுதல் பதிவையும் பதிவிட மாட்டார்கள்.
சில சமயங்களில் சினிமாவில் கோலோச்சிய மூத்த கலைஞர்கள் மறைந்தால் கூட ஒரு இரங்கல் பதிவையும் பதிவிட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.
'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். ஒருவேளை அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக பதிவிடாமல் இருக்கிறார் போலிருக்கிறது.