பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா |
தமிழ்த திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருடன் பணி புரியாத பல திரைக்கலைஞர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.
ஆனால், அவருடைய 'லாபம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே, தமிழ் சினிமா நடிகைகள் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிந்த திரைக்கலைஞர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் கூட எந்தவிதமான ஆறுதல் பதிவையும் பதிவிட மாட்டார்கள்.
சில சமயங்களில் சினிமாவில் கோலோச்சிய மூத்த கலைஞர்கள் மறைந்தால் கூட ஒரு இரங்கல் பதிவையும் பதிவிட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.
'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். ஒருவேளை அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக பதிவிடாமல் இருக்கிறார் போலிருக்கிறது.