ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வெளியாகி உள்ளன. அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகும் லாபம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், லாபம் படத்திற்கான எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் நேற்று வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அவரை மீட்ட அவரது உதவியாளர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.