இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
80களில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனுராதா, பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இவரது மகள் அபிநயஸ்ரீயும் படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வாய்ப்புகள் அமையாததால் நடன இயக்குனர் ஆனார். அனுராதாவின் மகன் கெவின் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜே.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள பூம் பூம் காளை படத்தில் கெவின் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.டி.குஷால் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் சிவலிங்கா படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, சச்சு, கிரேன் மனோகர், அபிநயஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.டி.குஷால் கூறியதாவது: நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே. அது நடப்பது எப்போது என பூம் பூம் காளையாக அலைபாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். என்றார். படம் நாளை வெளிவருகிறது.