எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திலுங்கில் வெளியான உப்பென்னா படம். மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹீரோ வைஷ்ணவ் தேஜ், க்ரீத்தி ஷெட்டி, இயக்குனர் புஜ்ஜிபாபு ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும் வில்லனக விஜய்சேதுபதி நடித்திருந்தது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து விட்டது. இந்தப்படத்தை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகிய திரையுலக பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் பார்த்து பாராட்டியுள்ள நிலையில், தற்போது அல்லு அர்ஜுனும் இந்தப்படத்தை தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார். இந்தப்படம் வெளியான சமயத்தில் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்தார். திரும்பிவந்ததும் முதல் வேலையாக இந்த படத்தை பார்த்துள்ளார்..
ஹீரோ வைஷ்ணவ் தேஜ் தனது உறவினர் என்பதாலும் இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் பிரபல இயக்குனரான சுகுமார் என்பதால் அல்லு அர்ஜுன் இந்தப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். அல்லு அர்ஜுனின் திரையுலக வாழக்கையில், மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுகுமார். அதுமட்டுமல்ல, அல்லு அர்ஜுன் படம் மூலம் தான் சுகுமார் இயக்குனராகவே அறிமுகமானார். மேலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..