ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாரிக்கும் படம் பாம்பாட்டம். ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்கள். சவுகார் பேட்டை, கொம்பு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
பேண்டசி படமான இதில் மல்லிகா ஷெராவத் நாகமதி இளவரசியாக நடிக்கிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது.