ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் |
தமிழ் சினிமா காமெடியன்களில் தனது உடல்மொழி காமெடியால் பெருவாரியான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. ஆனபோதிலும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் டைரக்டர்களுடன் விவகாரம் என சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே படவாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்த கிடக்கிறார் வடிவேலு. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் நடித்து வந்த வடிவேலுவிற்கு ஒரு படம்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று சக சினிமா கலைஞர்களெல்லாம் அவரது நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, ''உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடம் லாக்டவுனிலேயே இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு உள்ளது, ஆனால் வாய்ப்பு தருவதில்லை என பேசியிருக்கிறார். அதோடு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் கண்கலங்கி பாடினாராம்.