மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்த பிறகுதான் 50 சதவீதத்தில் அனைத்துத் தியேட்டர்களும் நிரம்பின. அடுத்து இந்த மாதத்திலிருந்து தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இருந்தாலும் எந்தத் தியேட்டரிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்து ஹவுஸ்புல் போர்டு மாட்டப்படவில்லை.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதாக சில தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வடபழனியின் பிரபலமான தியேட்டரான கமலா தியேட்டர் இரண்டு தியேட்டர்களைக் கொண்டது. இரண்டு தியேட்டர்களுக்கும் சேர்த்து 1000 இருக்கைகள் நேற்று முழுவதுமாக நிரம்பியதாகத் தெரிவித்துள்ளார்கள்.
“1000 டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுவிட்டன. ஹவுஸ்புல் போர்டு பார்க்க ஆனந்தக் கண்ணீர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.