பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்த பிறகுதான் 50 சதவீதத்தில் அனைத்துத் தியேட்டர்களும் நிரம்பின. அடுத்து இந்த மாதத்திலிருந்து தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இருந்தாலும் எந்தத் தியேட்டரிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்து ஹவுஸ்புல் போர்டு மாட்டப்படவில்லை.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதாக சில தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வடபழனியின் பிரபலமான தியேட்டரான கமலா தியேட்டர் இரண்டு தியேட்டர்களைக் கொண்டது. இரண்டு தியேட்டர்களுக்கும் சேர்த்து 1000 இருக்கைகள் நேற்று முழுவதுமாக நிரம்பியதாகத் தெரிவித்துள்ளார்கள்.
“1000 டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுவிட்டன. ஹவுஸ்புல் போர்டு பார்க்க ஆனந்தக் கண்ணீர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.