பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார்.
தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாளத்தில் இருந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஏன் பெறுவதில்லை என்பது பற்றி பேசியிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
அதில், “ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படத்தை மலையாளத்திலும், தமிழ் படத்தை தமிழிலும், தெலுங்குப் படத்தை தெலுங்கிலும் தான் பார்க்க வேண்டும்.
வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை". என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
மஞ்சிமா மோகன் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.