இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மலையாளத்தில் 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சிமா மோகன், தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படம் மூலமாக தமிழில் நுழைந்து சில படங்களில் நடித்த பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஆமதாபாத் விமான விபத்து குறித்தும் அது சம்பந்தமாக தற்போது நடக்கும் சில அநாகரிக நிகழ்வுகள் குறித்தும் தனது வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மனிதநேயம் எங்கே போனது? இதயத்தையே உலுக்குகின்ற ஒரு விபத்தில் பல பேர் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆனால் இங்கே சில பேர் அதை வைத்து லாபம் சம்பாதிக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது. அந்த சம்பவத்தை சென்சேஷன் ஆக்கி ஜோதிடம், நியூமராலஜி மூலமாக பயப்படுத்தும் விதமான தகவல்களை பரப்புவதுடன் மட்டமான ஜோக்குகளை உருவாக்குவது மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் இடிப்பது போல மைக்கை நீட்டி அவர்களைப் பேசச் சொல்லி வற்புறுத்துவது என பல அநாகரிக நிகழ்வுகள் நடக்கின்றன. இரக்கமும் மரியாதையும் தேவைப்படும் இந்த நேரத்தில் அடுத்த தலைமுறைக்கு நாம் இதைத்தான் உதாரணமாக நிர்ணயிக்க போகிறோமா ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.