பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 பட வேலைகள் ஆரம்பமானதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியது. கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அடுத்து கொரோனா பிரச்சினை தலைதூக்க படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியானது.
இதற்கிடையே பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கிய கமல், அடுத்து தேர்தல் வேலைகளில் பிசியாகி விட்டார். இதனால் இப்போதைக்கு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகாது என்பது உறுதியாகி விட்டது.
இதனால் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை இயக்க இருக்கிறார் ஷங்கர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர்கள் தில்ராஜு, சிரிஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
ஷங்கரும் அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்து விட்டதால் இந்தியன் 2 படம் டிராப் ஆவதாக சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலானது. ரசிகர்கள் மத்தியில் காரசார விவாதமும் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தியன் 2 படம் பற்றி ஷங்கர் பேசியுள்ளார். அதில், “ராம்சரண் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், 'இந்தியன்-2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். அதில் கமல் கலந்துகொண்டு நடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.