பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
சூர்யா - ஜோதிகா ஆகிய இருவரும் திருமணத்திற்கு முன்பு, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் 6, சில் லுன்னு ஒரு காதல் என ஏழு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளான அவர்கள் இதுவரை எந்த படத்திலும் இணையவில்லை.
திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் இருந்து ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து கதையின் நாயகியாக தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில், பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா சமீம், சூர்யா-ஜோதிகாவை மீண்டும் இணைக்க ஒரு கதை ரெடி பண்ணி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலையும் அவர்களை சந்தித்து பெற்று விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள ஹலிதா சமீம், ஸ்கிரிப்டை கூடிய சீக்கிரமே முடித்து அவர்களை மீண்டும் ஜோடியாக திரையில் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.