சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
சென்னை: எந்திரன் கதை திருட்டு வழக்கில், இயக்குனர் ஷங்கருக்கு, எழும்பூர் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 2010ல் ரஜினி நடித்த, எந்திரன் திரைப்படம் வெளியானது. நான் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி, இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து இயக்குனர் ஷங்கர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடியாகின.
இதையடுத்து, இந்த வழக்கு, 11 ஆண்டுகளுக்கு பின், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எழுத்தாளர்ஆரூர் தமிழ்நாடன் ஆஜரானார். ஆனால், இயக்குனர் ஷங்கர் ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.இதையடுத்து, எழும்பூர், இரண்டாவது மாஜிஸ்திரேட், இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். மேலும், பிப்., 19 முதல் வழக்கு விசாரணை துவங்கும் எனஉத்தரவிட்டார்.