மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

சென்னை: எந்திரன் கதை திருட்டு வழக்கில், இயக்குனர் ஷங்கருக்கு, எழும்பூர் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 2010ல் ரஜினி நடித்த, எந்திரன் திரைப்படம் வெளியானது. நான் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி, இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து இயக்குனர் ஷங்கர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடியாகின.
இதையடுத்து, இந்த வழக்கு, 11 ஆண்டுகளுக்கு பின், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எழுத்தாளர்ஆரூர் தமிழ்நாடன் ஆஜரானார். ஆனால், இயக்குனர் ஷங்கர் ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.இதையடுத்து, எழும்பூர், இரண்டாவது மாஜிஸ்திரேட், இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். மேலும், பிப்., 19 முதல் வழக்கு விசாரணை துவங்கும் எனஉத்தரவிட்டார்.




