25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "களத்தில் சந்திப்போம்". ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்க, ராஜசேகர் இயக்கி உள்ளார். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன் , பிரியா பவானி சங்கர் நடிக்க, காரைக்குடி செட்டியாராக "அப்பச்சி" என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார்.
இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது. கொரோனா பிரச்னையால் முடங்கி இருந்த படம் இப்போது வருகின்ற (தைப்பூசம்) ஜனவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .