சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் |
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகி நடிக்க நடிகை தேர்வு நடப்பதாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் தனது கவனத்திற்கு வர சமூகவலைதளத்தில், ''எனது பெயரை வைத்து நடிகர்கள் தேர்வு நடப்பதாக ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளனர். போலி நபர்கள் பெண்களை குறி வைத்து இது போன்று செய்கின்றன, எச்சரிக்கை தேவை. இதுகுறித்து சைபர் கிரைமிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.