திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகி நடிக்க நடிகை தேர்வு நடப்பதாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் தனது கவனத்திற்கு வர சமூகவலைதளத்தில், ''எனது பெயரை வைத்து நடிகர்கள் தேர்வு நடப்பதாக ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளனர். போலி நபர்கள் பெண்களை குறி வைத்து இது போன்று செய்கின்றன, எச்சரிக்கை தேவை. இதுகுறித்து சைபர் கிரைமிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.