புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங், இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு உதவியாக பெற்றோர்களும் இருந்துள்ளனர்.
இரண்டு வார ஓய்விற்குப் பிறகு பரிசோதனை எடுத்துப் பார்த்ததில் நெகட்டிவ் என வந்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஹிந்தியில் அஜய் தேவகன், அமிதாப்பச்சன் நடிக்க அஜய் தேவகன் இயக்கும் 'மே டே' படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார்.
அப்படப்பிடிப்பிற்காக மேக்கப் போட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டதை தெரிவித்துள்ளார்.
தமிழில் 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரகுல்.