நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
மலையாள திரையுலகில் உணர்ச்சிபூர்வமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. கிட்டத்தட்ட 55 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவரது டைரக்சனில், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம் என்கிற படம் வெளியானது. இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு 2015ல் 'என்னும் எப்பொழுதும்' என்கிற படத்தில் தான் இவர்கள் இணைந்து பணியாற்றி இருந்தார்கள், ஆனால் இந்த இடைவெளி இயல்பான ஒன்றுதான் என்றும் ஆனால் அதற்கு முன்னதாக மோகன்லாலுடன் ஒரு கோபத்தின் காரணமாக 12 வருடங்கள் வரை அவரை வைத்து படம் இயக்காமல் தவிர்த்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் இயக்குனர் சத்யன் அந்திக்காடு.. இத்தனைக்கும் மோகன்லாலை வைத்து தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்தான் சத்யன் அந்திக்காடு.
இது குறித்து அவர் கூறும்போது, “1994 ல் பிங்கமி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினேன். அதன்பிறகு நான் எழுதிய ஒரு கதையில் மோகன்லால் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அந்த சமயத்தில் அவர் பிஸியாக இருந்ததால் அவரை வைத்து அந்த படம் இயக்க முடியவில்லை. அதனால் அவர் மீது எனக்கு அப்போது ஒரு கோபம் ஏற்பட்டது. அந்த கோபத்தில் தான் அடுத்த 12 வருடங்கள் அவருடன் இணைந்து நான் பணியாற்றவே இல்லை.
அதன் பிறகு 2006ல் ரசதந்திரம் படத்தில் தான் மீண்டும் நாங்கள் இணைந்தோம். ஆனால் அப்படி 12 வருடம் கழித்து அவர் என்னுடைய படத்தில் மீண்டும் நடிக்க வந்தபோது ஏதோ நேற்று தான் என் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி போனார், மறுநாள் நடிக்க வந்து விட்டார் என்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அதுதான் மோகன்லால். ஆனால் இப்படி அவர் மீது நான் கோபத்தில் இருந்தது இப்போது வரை கூட அவருக்கு தெரியாது. இந்த இடத்தில் தான் இதை சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.