பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

100 கோடிக்கு மேல் படத்தின் பட்ஜெட், 500 கோடிக்கு மேல் வசூல் இதுதான் தற்போது தெலுங்கு சினிமாவின் ஹீரோக்கள் பார்முலா. இந்த வசூல் போட்டியில்தான் இன்று அனைத்து ஹீரோக்களும் உள்ளனர். படம் எத்தனை நாள் ஓடுகிறது, மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. 500 கோடி வசூல் என்கிற புரோமோ போஸ்டர் வெளியிடப்பட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.
அந்த வகையில் உருவாகி வரும் படம் 'சம்பரலா ஏடிக்கட்டு'. சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படம். ரோஹித் இயக்கத்தில், கே. நிரஞ்சன் ரெட்டி சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிப்பில், உருவாகும் படம் 125 கோடி ரூபாய் பட்ஜெட் என்று அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாய் துர்கா தேஜ் திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ், இந்த படத்திற்காக தயாராகி உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, ஸ்ரீகாந்த், சாய் குமார், அனன்யா நாகல்லா, ரவி கிருஷ்ணா ஆகியோருடன் ஹாலிவுட் வில்லன் ஒருவரும் நடிக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார்.