பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் |

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'மிராய்'. இப்படம் முதல் நாளில் 27 கோடியும், இரண்டாவது நாளில் 55 கோடியும், மூன்றாவது நாளில் 81.2 கோடியும் வசூலித்துள்ளது. அடுத்த சில நாட்களில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு தெலுங்குத் திரையுலகத்திலிருந்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரது பாராட்டுக்களும் இப்படத்திற்கு ரசிகர்களை மேலும் வரவழைத்துள்ளது. ஹிந்தியிலும் முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்துள்ளது.
ஆன்மிகம் கலந்த படங்களுக்கு இந்திய ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு வந்த அனிமேஷன் படமான 'மஹாவதார் நரசிம்மா' படம் 300 கோடி வசூலைக் கடந்தது. அது போல இந்தப் படத்திற்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வசூலும் 100 கோடியைக் கடந்து 200 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.